Tuesday 24 January 2012


DAY -4: [19.01.2012]****இன்று ஓர் தகவல்****
அஸ்ஸலாமு அலைக்கும்...
ஆயத்துல் குர்ஸிய்யியை குர் ஆனின் வசனங்களில் தலைமையான ஆயத்[ஸைய்யிதுல் ஆயாத்]என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா?அல்லாஹ்வுடைய தன்மைகள் இந்த வசனத்தில் மட்டுமே அதிகமாக வந்துள்ளன அவை:

அல்லாஹ்-
[1]அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை;
[2]அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்;[3]என்றென்றும் நிலைத்திருப்பவன்;
[4]அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; [5]வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன;
[6]அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?
[7](படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;
[8]அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது;
[9]அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது;
[10] அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - [11]அவன் மிக உயர்ந்தவன்;[12]மகிமை மிக்கவன்.(al qur'aan 2:255)
 

No comments:

Post a Comment