Sunday 11 March 2012

இன்று ஒரு தகவல்.
==================
குர்ஆனில் "யா அய்யுஹல்லதீன ஆமனூ"89.என்று -தடவையும்,
         ,,             "யா அய்யுஹன்னாஸ்" என்று"20 -தடவையும்
         ,,             "யா அய்யுஹர்ரசூலு"என்று"2 -தடவையும்,
         ,,             "யா அய்யுஹன்னன்பிய்யு"13-என்று -தடவையும்,
         ,,             "யா அய்யுஹல் இன்சானு"2-என்று-தடவையும் வருகின்றன.    

Sunday 5 February 2012

இன்று ஓர் தகவல்- மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் யார்?[பகுதி-1]

 ’மலக்’ என்றால் வானவர் என்பது பொருளாகும்.. இதன் பன்மை ‘ மலாயிக், மலாயிகா என்பதாகும்.’மலக்’ என்ற சொல் குர்ஆனில் பதிமூன்று இடங்களிலும்’மலகைன்’இருமை யாக இருதடவைகளும், ‘மலாயிகா’ என்று பன்மையில் 73 தடவைகளும் பயன் படுத்தப் பட்டுள்ளன. 1.வானவர்கள் என்றால் யார் ? ‘

மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்

வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்குக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) முஸ்லிம், அஹ்மத்:2996)
இவர்கள் ஆண்களுமல்ல! பெண்களுமல்ல! இவர்களுக்கு ஊண், உறக்கம் எதுவும் கிடையாது. இவர்கள் அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டும், வணங்கிக் கொண்டும் இருப்பார்கள். لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். எப்போதும் அவன் கட்டளைப்படியே நடப்பவர்கள். (66:6) இவர்கள் இறைவனுக்கும் மனிதர்களுக்கு மிடையே தொடர்பு கொள்ளும் தூதர்களாவர்

இன்று ஓர் தகவல்- மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் யார்?[பகுதி-2]


*வானவர்களின்-எண்ணிக்கை
وَمَا يَعْلَمُ جُنُودَ رَبِّكَ إِلَّا هُو

அவர்களின் எண்ணிக்கையை அல்லாஹ்வைத்தவிர எவரும் அறியமாட்டார்கள். ‘மேலும் உம்முடைய இறைவனின் (வானவர்கள் என்னும்) படைகளை அவனைத் தவிர எவரும் அறியமாட்டார்கள்’ (அல்குர்ஆன் 74:30)

*வானவர்களின் உணவு, பானம்
நபி இப்றாஹீம் (அலை) அவர்களிடம் கண்ணியமிக்க விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு காளைக் கன்றை பொரித்து வைத்ததும் உண்ணாததைக் கண்ட நபியவர்கள் பயந்துவிட்டார்கள். பயப்படாதீர்கள். நாங்கள் உங்களுக்கு நற்செய்தி கூறிவிட்டுச் செல்ல வந்த வானவர்கள்’ என்ற செய்தி 51:26,27 வசனங்கள் எடுத்துரைக்கின்றன. இதிலிருந்து மனதர்களின் உணவை உண்ணவோ,அருந்தவோ மாட்டார்கள் எனத் தெரியவருகிறது

*முற்;றிலும் அவனுக்கு வழிப்படுவர்.
அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப்பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள் (21:26,27) தமது இறைவனை போற்றிப்புகழ்ந்த வண்ணமிருப்பார்கள் (39:75)

* இறையில்லம், இறைமறை ஓதுமிடங்களில் வானவர்கள்.
உங்களில் உருவர் தொழுகையில் ஆமீன் கூறும்போது வானவர்களும்; ஆமீன் கூறுகின்றனர். எவரது ஆமீன் வானவர்களின் ஆமீனுக்கேற்ப உள்ளதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.(அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்: இப்னு மாஜா-851).

நாயகத் தோழர் உஸைத் இப்னு குளைர் குர்ஆன் ஓதும் போது ஒளிஉருவில் வானவர்கள் வந்து கேட்டுக் கொண்டிருந்தனர். (புகாரி 5018-ஹதீஸின் சுருக்கம்)

*நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவர்.
(வானவர்கள்) நல்லவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள் (42:5)
18. தீயவர்களை சபிப்பர் (லஃனத்துல்லாஹி வல்மலாயிக்கத்தி)

வானவர்கள் இறைவனுக்கு மாறுசெய்பவர்களுக்கு எதிராக சாபமிடுவார்கள்.

‘ ஏக இறைவனை மறுத்து,அதே நிலையில் இறந்தோர் மீது இறைவனின் சாபமும், வானவர்கள் நல்லோர்கள் அனைவரின் சாபமும் உள்ளது (2:161)

* உருவமுள்ள வீட்டில் நுழையார்.
நாயும்,உருவப்படமும் இருக்கும் வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள். (புகாரி-3225,முஸ்லிம்-2112,திர்மிதி-2804, நஸய5347, இப்னுமாஜா3649,

*வானவர்களின் தோற்றம்
மனிதர்கள் ஒருபோதும் வானவர்களாக முடியாது. ஆனால் வானவர்கள் விரும்பிய தோற்றத்தில் வரமுடியும்.நாய் பன்றியின் உருவத்தை தவிர.

இன்று ஓர் தகவல்-மலக்குகள் (الْمَلَائِكَةَ) வானவர்கள் யார்?[பகுதி-3]


வானவர்களின் பணிகள்
தூதுவச்செய்தியை அறிவிப்பது,மழைபொழிவிப்பது,காற்றை வீசச்செய்வது, கண்காணிப்பது, காப்பாற்றுவது,நன்மை தீமைகளை பதிவு செய்வது,உயிரைக்கைப்பற்றுவது,மண்ணறையில் விசாரணை செய்வது,நல்லவர்களுக்குப் பரிந்துரைப்பது,ஸூர்ஊதுவது, சுவர்க்கம் நரகத்தை காவல் புரிவது, அர்iஷ சுமப்பது போன்ற சில பொறுப்புகள் இறைவனால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.அத்தனையும் அல்லாஹ்வால் தான் செய்யப்படுகின்றன.ஆயினும் நிர்வாக சீரமைப்புக்காhவும், உலகின் ஒழுங்கு முறைக்காகவும்,கட்டுப்பாடான இயக்கத்திற் காகவும், மனிதன் பாடம் பெறுவதற்காகவும் வானவர்களிடம் இவ்வாறு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

யார் யாரிடம் என்னென்ன பொறுப்புகள் ?

1*வஹி -இறை தூதின்- பொறுப்பு.-வானவர் தலைவர் ஜிப்ரீல்(அலை) அர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறைதூதர்களுக்கு (நுபுவ்வத் என்னும்) தூதுவச் செய்திகளை கொண்டு வருவதே இவர்களின் பணியாகும்.

2* மழை, காற்றின் பொறுப்பு.- இதன் பொறுப்பாளர் வானவர் மீக்காயீல். இவர் மழை, காற்று,மரம் செடி கொடிகள் முதலானவற்றுக்குப்; பொறுப்பாளர் ஆவார்.

3* சூர் ஊதுவதின் பொறுப்பு.- இதன் பொறுப்பாளர் இஸ்ராஃபீல் (அலை). 

4*உயிரைக் கைப்பற்றும் வானவர். (மலக்குல் மவ்த்) உயிரைக்கைப்பற்றும் வானவருக்கு மலக்குல் மவ்த் எனக் குர்ஆன் கூறுகிறது. இவர்கள் பெயர் இஸ்ராயீல் என்று சொல்லப் படுகிறது.

7,8*மனிதனின் நன்மை தீமைகளை பதிவு செய்யும் வானவர- வலது பக்கமும் இடது பக்கமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ‘ரகீபுன் அத்தீத்’இது அவர்களின் பெயர்களல்ல. அவர்களின் பண்புப் பெயர்களாகும். ‘கிராமன் காத்திபீன்’ கண்ணியத்திற்குரிய எழுத்தாளர்கள் என்று அல்லாஹ்வே சிறப்பிக்கிறான்.(82;:12)

5,6* கப்ரில் (மண்ணறையில்) வருகை தரும் வானவர்கள்.-
இவர்களின் பெயர்கள் முன்கர்,நக்கீர்.

9*சுவர்க்கத்தின் காவலர்கள் (خزنة الجنة ) -அதன் தலைவர் ரிழ்வான் ஆவார்கள்,

10* நரகின் காவலர்கள் (خزنة جهنم)-அதன் தலைவர் மாலிக் ஆவார்

இது அல்லாது கணக்கற்ற மலக்குகள் உள்ளனர் அவர்களது எண்ணிக்கையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
 

இன்று ஓர் தகவல்


வேதங்கள்-4
திருக்குர்ஆனில் நான்கு வேதங் களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு:

1.ஸபூர்: தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)

2,தவ்ராத்: மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (நூல்: புகாரீ 4116, 4367)

3.இஞ்சில்: ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)

4.திருக்குர்ஆன்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)
இது அல்லாமல் பல நபிமார்களுக்கு பல ஏடுகளும் அனுப்பப்பட்டுள்ளன.
 — with Saheed Taher and 45 others.

குர்ஆனின் பாதுகாப்பு


நான்கு வேதங்களும் அல்லாஹ்விடமிருந்துதான் வந்தது என்றாலும் குர்ஆனைத் தவிர மற்ற மூன்றும் மறைந்து அல்லது மாற்றப்பட்டு இருப்பதன் காரணம் அவற்றை தாம் கடைசி வரை பாது காப்பதாக அல்லாஹ் எங்கும் வாக்கு கொடுக்கவில்லை ஆனால் குர்ஆனுக்கு இந்த வாக்குறுதியை அல்லாஹ் கூறியுள்ளான் எனவே எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் பரிசுத்த குர்ஆனை எந்த கொம்பனாலும் மாற்றவோ அழிக்கவோ முடியாது என்பதை உறுதியாக சொல்ல முடியும் இந்த பாதுகாப்பு வாக்குறுதியை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான் என்பதை பாருங்கள்:

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.15:9.

உலகம் அழியும் காலம் நெருங்கும்போது அல்லாஹ் குர்ஆனின் எழுத்துக்களை உயர்த்தி விடுவான் அதை திறந்தால் எழுத்து இன்றி வெறும் காகிதன்களே தெரியும்.
 

இன்று ஓர் தகவல்

*குர்ஆனிலேயே பெரிய சூரா[அத்தியாயம்]எது?
*குர் ஆனிலேயே பெரிய ஆயத்[வசனம்]எது?

குர்ஆனில் பெரிய சூரா, 2 வது சூராவாகிய 'அல் பகரா'ஆகும்,
குர்ஆனில் பெரிய ஆயத் சூரா பகராவில் உள்ள 282வது வசனமாகும், 



*குர்ஆனில் மொத்த வார்த்தைகள் மற்றும் எழுத்துக்கள் எத்தனை?

குர்ஆனின் வார்த்தைகள் மொத்தம்: 77439 ஆகும். (சிலர் 77437 என்றும் வேறுசிலர் 77277 என்றும் கூறுகின்றனர்).

குர்ஆனின் எழுத்துக்கள் மொத்தம்: 323015 ஆகும். (சிலர் 321000 என்றும் வேறுசிலர் 340740 என்றும் கூறுகின்றனர்).




. குர் ஆனில் மொத்தம் எத்தனை சூராக்கள்[chapter], ஜுஸ்வுகள்[volume],ஆயத்கள்[வசனங்கள்]உள்ளன?

குர் ஆனில் மொத்தம்
சூராக்கள்[chapter]-114 ,
*ஜுஸ்வுகள்[volume]-30
*ஆயத்கள்[வசனங்கள்]-6666.

நேரத்தின் மதிப்பு தெரிய வேண்டுமா?


· பத்து வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, பத்து வருடங்கள் ஒன்றாய் வாழ்ந்து விவாகரத்துக்குள்ளான தம்பதிகளிடம் கேளுங்கள்.
· நான்கு வருடங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, நான்கு வருடங்கள் காதலித்து விட்டு, தற்போது பிரிந்திருக்கும் இருவரிடம் கேளுங்கள்.
· ஒரு வருடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு வருட படிப்பின் பின்னர், இறுதிப் பரீட்சையில் தோல்வியடைந்த ஒரு மாணவனிடம் கேளுங்கள்.
· ஒன்பது மாதங்களின் மதிப்பை உணர்ந்து கொள்ள, முழு வளர்ச்சியின் பின்னர், பிரசவத்தில் இறந்து பிறந்த குழந்தையைப் பெற்ற தாயிடம் கேளுங்கள்.
· ஒரு மாதத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒருமாத கர்ப்பத்தின் பின்னர், கருச்சிதைவு நடந்த ஒரு தாயிடம் கேளுங்கள்.
· ஒரு கிழமையின் மதிப்பை உணர்ந்து கொள்ள, வார பத்திரிகையின் பதிப்பாசிரியரைக் கேளுங்கள்.
· ஒரு மணி நேரத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, சந்திப்பதற்கு காத்திருந்து சந்திக்க முடியாமல் போன காதலர்களைக் கேளுங்கள்.
· ஒரு நிமிடத்தின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு நிமிட நேரத்தில் பஸ்ஸையோ, ரயிலையோ, விமானத்தையோ தவற விட்டு விட்ட நபரைக் கேளுங்கள்.
· ஒரு செகண்டின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒரு விபத்திலிருந்து நிமிட நேரத்தில் உயிர் பிழைத்த நபரைக் கேளுங்கள்.
· ஒரு மில்லி செகண்டின் மதிப்பை உணர்ந்து கொள்ள, ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் பெற்ற ஒரு நபரைக் கேளுங்கள்.
நேரம் யாருக்காகவும், எதற்காகவும் காத்திருப்பதில்லை. தேர்வு நெருங்கிக் கொண்டு இருப்பதால் உங்களுக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு கணத்தையும் பொக்கிஷமாய் பாருங்கள். உங்களுக்கு மிகப் பிடித்த செயல்களைச் செய்வதற்காக நேரத்தை செலவு செய்யும்போது உங்களது நேரம் மேலும் பெரும் மதிப்பு மிக்கதாயிருக்கும்.
POSTED BY AGNIPUTHIRAN
 

****இன்று ஓர் தகவல்****

*குர் ஆனில் எந்த நபியுடைய பெயர் அதிகமாக வருக்கிறது?
நபி மூஸா[அலை]அவர்களின் பெயர்.

*குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் வந்துள்ளன?
மொத்தம் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்கள் வந்துள்ளன.


*குர்ஆனில் ஆரம்பமாக இறங்கிய அத்தியாயம் அல்-அலக்[96]ஆகும்.

*குர்ஆனில் கடைசியாக அருளப்பட்ட அத்தியாயம் அந்நஸ்ரு[110]ஆகும்.


*நபி [ஸல்]அவர்களின் முஹம்மத் என்ற பெயர் குர்ஆனில்
எத்தனை இடங்களில் வருகின்றன?-நான்கு இடங்களில்.3:144,/33:40/47:2/48:29.

*அஹமத் என்ற பெயர் எத்தனை இடங்களில் வருகின்றன?-ஒரே ஒரு இடத்தில் மட்டும்.61:6

*எந்த [ஸஹாபி] நபித்தோழரின் பெயர் குர்ஆனில் வருகிறது?- நபி [ஸல்]அவர்களின் வளர்ப்பு மகன் ஜைத்[ரலி]அவர்களின் பெயர் மட்டுமே. 33:37. 

மனத் தூய்மை மிக முக்கியம்.

உடல் நலம் மிகவும் முக்கியம். அதைவிட முக்கியம் மனநலம். நம்முடைய மனதானது ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருந்தால் தான் நம்மால் நமது உடலை நல்லபடியாக பாதுகாக்க முடியும். மனம் எக்காரணத்திலாவது சோர்ந்து போய் பாதிக்கப்பட்டால் நமது உடல் நலம் வெகுவாக பாதிப்படையும்.

ஒருநாள் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உட்கார விரும்பினான். அவன் உட்கார விரும்பிய இடத்தில் தூசுகள் படிந்திருந்தன. உடனே அதை சுத்தம்செய்து விட்டு அந்த இடத்தில் உட்கார்ந் தான். இதை கவனித்துக் கொண்டிருந்த அவனது தாயார் மகனிடம் விசாரித்தார்.

“சற்று முன்னர் நீ என்ன காரியம் செய்தாய்”

“அம்மா தரை தூசியாக இருந்தது. அதனால் அந்தத் தூசியை தட்டிவிட்டு உட்கார்ந்தேன்.”

இப்போது அந்த அம்மையார் தனது மகனிடத்தில் சொன்னார்.

“இறைவனும் அப்படிதானப்பா. நம்முடைய மனசுக்குள் அழுக்கு இருந்தால் அவர் அங்கே வந்து உட்காரமாட்டார். நாம் நம்முடைய மனத்தினுள் நிறைந்திருக்கும் பொறாமை மற்றும் தீய எண்ணங்களை துடைத்து சுத்தம் செய்து மனத்தை மிகத்தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இறைவன் அங்கே வந்து உட்காருவார்”

தாயார் சொன்ன இந்த அறிவுரை அந்தச் சிறுவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அறிவுரையைப் பின்பற்றி வாழ ஆரம்பித்தான் அந்தச் சிறுவன். அச்சிறுவனே பிற்காலத்தில் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்த திருமுருக கிருபானந்த வாரியார்

இது போன்று நாமும் நம்மவர்களுக்கு இஸ்லாமிய ஆன்மிகத்தை எடுத்து சொல்லலாமே?

Tuesday 24 January 2012


DAY -4: [19.01.2012]****இன்று ஓர் தகவல்****
அஸ்ஸலாமு அலைக்கும்...
ஆயத்துல் குர்ஸிய்யியை குர் ஆனின் வசனங்களில் தலைமையான ஆயத்[ஸைய்யிதுல் ஆயாத்]என்று ஏன் சொல்லப்படுகிறது தெரியுமா?அல்லாஹ்வுடைய தன்மைகள் இந்த வசனத்தில் மட்டுமே அதிகமாக வந்துள்ளன அவை:

அல்லாஹ்-
[1]அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை;
[2]அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்;[3]என்றென்றும் நிலைத்திருப்பவன்;
[4]அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; [5]வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன;
[6]அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்?
[7](படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;
[8]அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது;
[9]அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது;
[10] அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - [11]அவன் மிக உயர்ந்தவன்;[12]மகிமை மிக்கவன்.(al qur'aan 2:255)
 

DAY 3-[18.01.2012].இன்று ஓர் தகவல்

அல்லாஹ்வுக்குரிய அழகிய திருநாமங்கள் 99 ம் சிறப்பு பெயர்கள்தான் அவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு பெயர் அல்லாஹ் என்ற பெயராகும்,

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள்.குர்ஆன் (Surat Al-A’raf 7:180)

அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஹதீஸ், புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி.

(DAY-2) இன்று ஓர் தகவல்:

أركان الإيمان
ஈமானின் அடிப்படைகள்-6 அவை:

1. அல்லாஹ்வை நம்புதல்

2. அவனுடைய மலக்குகளை (வானவர்களை) நம்புதல்

3. அவனுடைய வேதங்களை நம்புதல்

4. அவனுடைய தூதர்களை நம்புதல்

5. மறுமையை நம்புதல்

6. விதியின்படியே நன்மை, தீமை யனைத்தும்
.

1.இன்று ஒரு தகவல்: இஸ்லாத்தின் கடமைகள் (5)
'[1]வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல்,[2] தொழுகையை நிலை நிறுத்துதல்,[3] ஸகாத்து வழங்குதல்,[4] ரமாலானில் நோன்பு நோற்றல்,[5]ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள். 
 ·  ·  · 16 January at 15:55