Sunday 5 February 2012

குர்ஆனின் பாதுகாப்பு


நான்கு வேதங்களும் அல்லாஹ்விடமிருந்துதான் வந்தது என்றாலும் குர்ஆனைத் தவிர மற்ற மூன்றும் மறைந்து அல்லது மாற்றப்பட்டு இருப்பதன் காரணம் அவற்றை தாம் கடைசி வரை பாது காப்பதாக அல்லாஹ் எங்கும் வாக்கு கொடுக்கவில்லை ஆனால் குர்ஆனுக்கு இந்த வாக்குறுதியை அல்லாஹ் கூறியுள்ளான் எனவே எந்த காலத்திலும் எந்த சூழ்நிலையிலும் பரிசுத்த குர்ஆனை எந்த கொம்பனாலும் மாற்றவோ அழிக்கவோ முடியாது என்பதை உறுதியாக சொல்ல முடியும் இந்த பாதுகாப்பு வாக்குறுதியை அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான் என்பதை பாருங்கள்:

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ
நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.15:9.

உலகம் அழியும் காலம் நெருங்கும்போது அல்லாஹ் குர்ஆனின் எழுத்துக்களை உயர்த்தி விடுவான் அதை திறந்தால் எழுத்து இன்றி வெறும் காகிதன்களே தெரியும்.
 

No comments:

Post a Comment